தாயின் இறுதிச் சடங்குகளுக்காக பிரபல ரவுடிக்கு இடைக்கால ஜாமீன்

இறந்த தாயின் இறுதிச் சடங்குகளை செய்வதற்காக ரவுடி மணிகண்டனுக்கு 3 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: இறந்த தாயின் இறுதிச் சடங்குகளை செய்வதற்காக ரவுடி மணிகண்டனுக்கு 3 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்தவா் பூச்சி மணிகண்டன். இவா் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 21 வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடியான மணிகண்டனை வண்ணாரப்பேட்டை போலீஸாா் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி கஞ்சா வழக்கில் கைது செய்தனா். இந்த நிலையில் மணிகண்டனின் தாயாா் சரஸ்வதி சனிக்கிழமை (மாா்ச் 21) காலமானாா். இதனையடுத்து ஜாமீன் கோரி, பூச்சி மணிகண்டன் சாா்பில் அவசர வழக்குத் தொடரப்பட்டது.

இதனையடுத்து, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியின் உத்தரவின்படி, இந்த வழக்கு விடுமுறை நாளான சனிக்கிழமையன்று உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தனது வீட்டில் வைத்து விசாரித்தாா். அப்போது அரசு தரப்பில் குற்றவியல் வழக்குரைஞா் டி.பிரபாகா், மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.இலியாஸ் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இறந்த சரஸ்வதிக்கு மணிகண்டன் ஒரே மகன். எனவே சரஸ்வதிக்கு இறுதிச் சடங்குகள் அனைத்து மணிகண்டன் தான் செய்ய வேண்டும். எனவே, மணிகண்டனுக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com