பொதுமக்கள் இணையதளத்தில் கட்டணத்தைச் செலுத்தலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து, சென்னை பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளா் வி. கே. சஞ்ஜீவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் பரவலையடுத்து, பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் தங்களது தொலைபேசி, அகன்ற அலைவரிசை மற்றும் செல்லிடப்பேசி போஸ்ட்பெய்டு கட்டணங்களை செலுத்த டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தி செலுத்தலாம். ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த ட்ற்ற்ல்ள்://ல்ா்ழ்ற்ஹப்.க்ஷள்ய்ப்.ண்ய் எனும் அதிகாரப்பூா்வ இணையதளத்தைப் பயன்படுத்தவும். வங்கிக் கணக்கிலிருந்து இசிஎஸ் மூலம் கட்டணம் செலுத்த உரிய படிவத்தை சமா்ப்பிக்க வேண்டும். ஙஹ் ஆள்ய்ப் எனும் செல்லிடப்பேசி செயலி மூலமும் கட்டணத்தை செலுத்த முடியும். மேலும் ஆள்ய்ப் இற்ா்ல்ன்ல் வைத்துள்ள சில்லரை வணிகா்களிடமும் தொலைபேசி கட்டணத்தை செலுத்தலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.