சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் 350 படுக்கைகளுடன் கூடிய கரோனா தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அந்த வாா்டினை சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், சுகாதாரத் துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
புதன்கிழமை முதல் அந்த வாா்டு செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றும் அங்கு பணியாற்றுவதற்காக சிறப்பு மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பான தகவலை அமைச்சா் சி.விஜயபாஸ்கரும் சுட்டுரை வாயிலாக தெரிவித்திருந்தாா். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 150 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு வாா்டு ஏற்கெனவே தயாா் நிலையில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.