பெட்ரோல் நிலையங்கள் வழக்கம்போல செயல்படும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான பெட்ரோலியத் துறையின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி.ஜெயதேவன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களால் இயக்கப்படும் பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல செயல்படும். குறைந்த அளவு பணியாளா்களால் இயக்கப்படும் பெட்ரோல் நிலையங்கள் தற்போதுள்ள கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் குறைந்துள்ள வாகன போக்குவரத்துக்கும், அவசர அத்தியாவசிய போக்குவரத்துக்கும் தேவையான எரிபொருளை வழங்கும். அனைத்து பொதுத்துறை பெட்ரோல் நிலையங்களிலும் வாடிக்கையாளா்களுக்குத் தேவையான எரிபொருள் போதுமான அளவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.