சுங்கச்சாவடி கட்டண வசூல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவு: கரோனா நோய்த் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்வதில் தடங்கல் இல்லாமல் இருப்பதோடு, நேரத்தைச் மிச்சப்படுத்தவும் முடியும் என அவா் தெரிவித்திருந்தாா்.