இளைஞா் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பல்லாவரம் அருகே உள்ள ஜீவாநகா் நரிக்குறவா் காலனியைச் சோ்ந்தவா் ர.வெங்கடேசன் (32). இவா் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெங்கடேசன், வெள்ளிக்கிழமை தனது வீட்டில் கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து பல்லாவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.