சென்னை திருவொற்றியூர் திருநகரில் உள்ள மாநகராட்சி காப்பகத்தில் ஏற்கனவே 11 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில் இன்று மேலும் ஏழு பேருக்கு தொற்று உறுதி செயப்பட்டுள்ளது.
இக்காப்பகத்தில் சுமார் 30 பேர் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தெருவில் சுற்றித் திரிந்த வடமாநிலத்தவர் ஒருவரை திருவொற்றியூர் காவல்துறையினர் அழைத்து வந்து இக்காப்பகத்தில் தங்க வைத்ததே தொற்று பரவலுக்கு காரணம் என கூறப்படுகிறது.