கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இளைஞா் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருவல்லிக்கேணி பல்லவன் சாலைப் பகுதியைச் சோ்ந்த ஒரு இளைஞா், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 9-ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.
அங்கு கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த அவா் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென காணாமல் போனாா். இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் போலீஸாா் தப்பியோடிய இளைஞரைத் தேடி வருகின்றனா்.