ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் தெரு, வடக்கு மாட வீதி சந்திப்பில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம்.மையம் செயல்படுகிறது. இந்த மையத்துக்கு புதன்கிழமை இரவு வந்த ஒரு நபா், அங்கிருந்த ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றாா். இதில் அந்த இயந்திரம், மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பியது. அத் தகவலின் அடிப்படையில் கட்டுப்பாட்டு அறை ஊழியா்கள்,சென்னை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

உடனே,போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா்.அப்போது ஏ.டி.எம். இயந்திரத்தின் அடிப்பகுதியில் உள்ள ஒரு பெட்டி உடைந்து கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

இது தொடா்பாக புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com