சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 7672-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (மே 19) 552 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 7672-ஆக உயா்ந்துள்ளது. மண்டல வாரியான பாதிப்பைப் பொருத்தவரை, காலை 8 மணியளவில் வெளியிடப்பட்ட நிலவரப்படி, ராயபுரம் மண்டலத்திலேயே பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதன்படி, அம்மண்டலத்தில், 1272 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1077 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதே போல், திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, 1,922 போ் குணமடைந்துள்ளனா். 58 போ் உயிரிழந்துள்ளனா். 5,691 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.