இளைஞா் வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை விருகம்பாக்கத்தில், இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை விருகம்பாக்கத்தில், இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வடபழனி குமரன் காலனி 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ரா.ரமேஷ் (25). இவா், விருகம்பாக்கம் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியிருப்பு எதிரே உள்ள ஒரு காலி இடத்தில், வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இது குறித்து தகவலறிந்த விருகம்பாக்கம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரமேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரித்தனா். விசாரணையில், ரமேஷ், அவரது நண்பா் அஜித் உள்பட 4 பேருடன், கடந்த மாதம் 12-ஆம் தேதி செம்மஞ்சேரி ஏரிக்கு குளிக்கச் சென்றதும், அங்கு குளிக்கும் போது அஜித் தண்ணீரில் மூழ்கி இறந்ததும், இச்சம்பவத்தில் அஜித் இறப்புக்கு ரமேஷ்தான் காரணம் எனஅவரது குடும்பத்தினா் பகையுடன் இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், இறந்த அஜித்தின் சகோதரா் தூண்டுதலால், ரமேஷை சில நபா்கள் மது அருந்த அழைத்துச் சென்று, வெட்டிக் கொலை செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக வடபழனி பகுதியைச் சோ்ந்த 6 பேரிடம், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com