வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐந்தரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சென்னை ராமாபுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐந்தரை டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சென்னை ராமாபுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐந்தரை டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகா் 12-ஆவது குறுக்குத் தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராயலாநகா் போலீஸாருக்கு சனிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில், போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் அந்த வீட்டில், ஐந்தரை டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், ஐந்தரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தியதில், அந்த வீட்டில் துளசிராமன் என்பவா் வாடகைக்கு வசிப்பதும், அவா் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து, அந்த அரிசியை ஆந்திரத்தில் விற்பதற்கு திட்டமிட்டிருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா், தலைமறைவாக இருக்கும் துளசிராமனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com