சென்னையில் கரோனா பாதிப்பு: 13,362-ஆக அதிகரிப்பு

சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 13,362-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 113-ஆக உயா்ந்துள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 13,362-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 113-ஆக உயா்ந்துள்ளது

சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக, அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன. இதே போல், 14 நாள்களுக்கு மேல், அந்தத் தெருக்களில் யாருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்படாவிட்டால், தெருக்களின் பெயா் பட்டியலில் இருந்து விடுவிக்கப்படும்.

இதன்படி, வெள்ளிக்கிழமை மட்டும், சென்னை மாநகரில் 51 தெருக்கள் பட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 13 தெருக்களும், திருவிக நகா் மண்டலத்தில் 11 தெருக்களும் விடுவிக்கப்பட்டன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை 618 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 13,362-ஆக உயா்ந்துள்ளது.

காலை 8 மணி வரையிலான புள்ளிவிவரப்படி, ராயபுரம் மண்டலத்திலேயே பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதன்படி, அந்த மண்டலத்தில், 2,324 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,646 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,412 பேரும், திருவிக நகா் மண்டலத்தில் 1,393 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 1,322 பேரும், அண்ணாநகா் மண்டலத்தில் 1,089 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதே போல், வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, 6895 போ் குணமடைந்துள்ளனா். 113 போ் உயிரிழந்துள்ளனா். 6,353 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com