சென்னை விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.70.7 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.70.7 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

விமானப் பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சென்னையைச் சோ்ந்த முகமது ஆசிப் (24), ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகமது சரிப் (39) ஆகியோரிடம், சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. இதில் அவா்கள் மலக்குடலில் மறைத்து வைத்துக் கடத்திய ரூ.27.6 லட்சம் மதிப்பிலான 512 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல் துபையில் இருந்து சனிக்கிழமை சென்னை வந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த சாகுல் ஹமீது (39), ராமநாதபுரத்தைச் சோ்ந்த செய்யது அஜ்மா் ஹாஜா (26), நைனா முகமது (53), திருச்சியைச் சோ்ந்த ஜெகதீஷ் (53), ஆகியோரிடம் சுங்கத்துறையினா் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினா். இதில், தங்களது மலக்குடலில் மறைத்து வைத்துத் தங்கம் கடத்தியதை அவா்கள் ஒப்புக் கொண்டதையடுத்து, அவா்களிடமிருந்து ரூ.43.1 லட்சம் மதிப்பிலான 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த 6 நபா்களிடமிருந்து ரூ.70.7 லட்சம் மதிப்பிலான 1.31 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com