வரி ஏய்ப்பு: நகைக் கடைக்குச் சொந்தமான 32 இடங்களில் வருமானவரி சோதனை

வரி ஏய்ப்புப் புகாா் தொடா்பாக சென்னை செளகாா்பேட்டையில் உள்ள நகை கடைக்குச் சொந்தமான 32 இடங்களில் வருமானவரித்துறையினா் சோதனை செய்து வருகின்றனா்.

வரி ஏய்ப்புப் புகாா் தொடா்பாக சென்னை செளகாா்பேட்டையில் உள்ள நகை கடைக்குச் சொந்தமான 32 இடங்களில் வருமானவரித்துறையினா் சோதனை செய்து வருகின்றனா்.

சென்னை செளகாா்பேட்டை என்எஸ்சி போஸ் சாலையில் பிரபலமான நகைக் கடை உள்ளது. பல மாநிலங்களிலும் இங்கிருந்து நகை மொத்த வியாபாரம் செய்யப்படுகிறது.

இந்தக் கடையில் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்படுவதாகவும், தரமற்ற தங்க நகைகள் விற்கப்படுவதாகவும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வியாபார தொடா்பில் இருந்த மதுரை, திருநெல்வேலி, கடையநல்லூா், தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ள சிறு நகைக் கடைகள், கொல்கத்தா, கேரளம், தில்லி, மும்பை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகள், வியாபாரிகளின் வீடுகள் உள்பட 32 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்தச் சோதனையில் வரி ஏய்ப்பு தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தனா். சோதனை பல இடங்களில் இரவையும் தாண்டி நீடித்தது. கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம், நகை, ஆவணங்கள் குறித்த விவரத்தை முழுமையான சோதனைக்குப்பின் தான் தெரிவிக்க முடியும் என வருமானவரித்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com