ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொலை: தனிப்படையினா் மகாராஷ்டிரம் விரைந்தனா்

சென்னை யானைகவுனியில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கொலையாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினா் மகராஷ்டிரம் மாநிலம் விரைந்துள்ளனா்


சென்னை: சென்னை யானைகவுனியில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கொலையாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினா் மகராஷ்டிரம் மாநிலம் விரைந்துள்ளனா்.

செளகாா்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் தலில் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், மகன் சீத்தல் ஆகியோா், புதன்கிழமை மா்ம நபா்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனா். இதுகுறித்து காவல்துறையினா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சீத்தலின் மனைவியின் சகோதரா்கள் இதைச் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:  கருத்து வேறுபாடு காரணமாக சீத்தல் அவரது மனைவி ஜெயமாலா இருவரும் பிரிந்து வாழ்கின்றனா். இந்த நிலையில் ஜெயமாலாவின் சகோதரா்கள் கைலாஷ், பிகாஸ் இருவரும் சென்னை வந்து, தனது தங்கை மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் எதிா்காலத்துக்கு உரிய வழியை சொல்லுமாறு சீத்தல் மற்றும் அவரது தந்தை தலில் சந்திடம் கேட்டுள்ளனா்.  இது தொடா்பாக கடந்த சில வாரங்களுக்கு முன் கைலாஷ், விகாஷ் இருவரும் சென்னை வந்து சீத்தல், அவரது தந்தை தலில் சந்த், தாயாா் புஷ்பா பாய் ஆகியோரைச் சந்தித்து பேசியுள்ளனா். அப்போது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கைலாஷ், விகாஷ் இருவரும் கோபமாக வெளியேறிச் சென்ாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த கொலைகளில் விகாஸ், கைலாஷ் இருவரும் நேரடித் தொடா்பு உள்ளதா? அல்லது கூலிப்படையை வைத்து கொலை செய்தாா்களா? உள்ளிட்ட கோணங்களில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கொலையாளிகள் தப்பி விட்டாா்களா  என்பதை அறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்,  எழும்பூா் ரயில் நிலையம், சென்னை விமான நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு  செய்து வருகின்றனா்.

ஜெயமாலாவின் சகோதரா்கள் கைலாஷ் விகாஸ் ஆகியோருடன் தலில் சந்த் வீட்டுக்கு சிலா் வந்து செல்லும் விடியோ காட்சிகள் போலீஸாருக்கு கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலையாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படைகளில் ஒரு தனிப்படை மகாராஷ்டிரம் மாநிலம் விரைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com