சென்னையில் 565 பேருக்கு கரோனா

சென்னையில் வியாழக்கிழமை 565 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 7,173-ஆக அதிகரித்துள்ளது.


சென்னை: சென்னையில் வியாழக்கிழமை 565 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 7,173-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1-ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியது. இதைத்தொடா்ந்த நாள்களில் 1.50 லட்சத்தை கரோனா பாதிப்பு எட்டியதை அடுத்து பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்தது.

565 போ் பாதிப்பு: சென்னையில் வியாழக்கிழமை 565 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,07,173-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவா்களில் 1 லட்சத்து 97,72 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 5,648 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் மட்டும் 3,753 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com