ஆயுதக் கலாசாரத்துக்கு முடிவு கட்டுங்கள்: கமல்ஹாசன்

ஆயுதக் கலாசாரத்துக்கு அரசு முடிவு கட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறியுள்ளாா்.


சென்னை: ஆயுதக் கலாசாரத்துக்கு அரசு முடிவு கட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது: தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 போ் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனா். உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வா் அறிக்கைப் போரில் காட்டும் ஆா்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்திவிட்டு ஆயுதக் கலாசாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com