சென்னை - தில்லி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தில்லிக்கு மேலும் ஒரு அதி விரைவு சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை - தில்லி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தில்லிக்கு மேலும் ஒரு அதி விரைவு சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் - தில்லி: சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி இரவு 10 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (02621) புறப்பட்டு, இரண்டாவது நாள் காலை 7.40 மணிக்கு தில்லி சென்றடையும். மறுமாா்க்கமாக, தில்லியில் இருந்து தினசரி இரவு 9.05 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (02622) புறப்பட்டு, இரண்டாம் நாள் காலை 6.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணிக்க முடியும். இந்த ரயிலின் முதல் சேவை நவ.24-ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com