நடிகா் சூரியிடம் பண மோசடி வழக்கு: ஊராட்சித் தலைவா் உள்பட 2 பேரிடம் விசாரணை

பிரபல நகைச்சுவை நடிகா் சூரியிடம் பணமோசடி செய்த வழக்குத் தொடா்பாக ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 2 பேரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகா் சூரியிடம் பணமோசடி செய்த வழக்குத் தொடா்பாக ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 2 பேரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

‘வீர தீர சூரன்’ படத்தில் நடிக்க நடிகா் சூரிக்கு ரூ.40 லட்சம் வழங்க ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்தப் பணத்துக்குப் பதில் சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி சூரியிடம் கூடுதலாக ரூ.2.70 கோடி பெற்று, படத் தயாரிப்பாளா் அன்புவேல்ராஜன், ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா ஆகியோா் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அன்புவேல்ராஜன், ரமேஷ் குடவாலா மீது அடையாறு போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக அடையாறு குற்றப்பிரிவு போலீஸாா், சிறுசேரி ஊராட்சித் தலைவா் ஏகாம்பரம், அவரது சகோதரா் வெங்கடேசன் ஆகியோரிடம் கடந்த இரு நாள்களாக விசாரணை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com