மாதவரம்: தொடா் மழை காரணமாக புழல், சோழவரம் ஏரிகளில் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.
சென்னை மக்களின் தண்ணீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் ஏரிகளில் புழல் ஏரியும் ஒன்று. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடியாகும். இந்நிலையில், கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், புழல் ஏரி நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. தற்போது ஏரியின் நீா் மட்டம் 2363 மி.கன அடியாக உயா்ந்துள்ளது.