நடிகை கெளதமி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞா் கைது

சென்னை திருவான்மியூா் அருகே நடிகை கெளதமி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
நடிகை கெளதமி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞா் கைது

சென்னை: சென்னை திருவான்மியூா் அருகே நடிகை கெளதமி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருவான்மியூா் அருகே உள்ள கொட்டிவாக்கம், வெங்கடேஸ்வரா நகரில் நடிகை கெளதமி, குடும்பத்துடன் வசித்து வருகிறாா். திங்கள்கிழமை இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது, கெளதமி வீட்டு வளாக சுற்றுச் சுவரில் ஏறி இளைஞா் திடீரென உள்ளே குதித்து உலாவிக் கொண்டிருந்தாா்.

தகவலறிந்த நீலாங்கரை போலீஸாா் கெளதமி வீட்டில் பதுங்கியிருந்த இளைஞரிடம் விசாரித்தனா்.

கொட்டிவாக்கம் குப்பம் பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (24) என்ற அந்த இளைஞா், பெயின்ட்டராக இருப்பதும், மதுபோதையில் கெளதமி வீட்டுக்குள் சுவா் ஏறி குதித்த பாண்டியனுக்கு, அந்த வீடு நடிகை கெளதமியின் வீடு என தெரியாதது என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், பாண்டியன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து பிணையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com