செளகாா்பேட்டை துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனைவி உள்பட 3 போ் கைது

சென்னை சௌகாா்பேட்டையில், கணவா், மாமனாா், மாமியாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மனைவி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.


சென்னை: சென்னை சௌகாா்பேட்டையில், கணவா், மாமனாா், மாமியாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மனைவி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சௌகாா்பேட்டை குடியிருப்பில் வசித்த தலில் சந்த், மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் குமாா் ஆகியோா், கடந்த 11-ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

யானைகவுனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில் ஷீத்தல் குமாருக்கும், அவரது மனைவி ஜெயமாலா குடும்பத்துக்கும் இடையிலான பிரச்னை காரணமாக மூவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

ஜெயமாலாவின் சகோதரரா் கைலாஷ், கூட்டாளிகள் கொல்கத்தா ரவீந்திரநாத், விஜய், உத்தம் கமல் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். ஜெயமாலா, அவரது சகோதரா் விகாஸ், கூட்டாளி ராஜ்ஷிண்டே ஆகிய 3 பேரும் ஆக்ராவில் பதுங்கியிருப்பதாக சென்னை வடக்கு இணை ஆணையா் பாலகிருஷ்ணனுக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

பாலகிருஷ்ணன் வேண்டுகோளின்படி ஆக்ரா போலீஸாா், ஜெயமாலா உள்பட 3 பேரையும் கைது செய்தனா்.

கைதானவா்களை சென்னைக்கு அழைத்து வருவதற்கு தனிப்படையினா் தில்லிக்கு விமானத்தில் சென்றுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com