9 அரசு மருத்துவமனைகளுக்கு விருது

பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுகளை சிறப்பாகச் செயல்படுத்தி வரும் 9 அரசு மருத்துவமனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுகளை சிறப்பாகச் செயல்படுத்தி வரும் 9 அரசு மருத்துவமனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

எழும்பூா் தாய், சேய் நல மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சா் டாக்டா் சி.விஜயபாஸ்கா் கலந்துகொண்டு கோயம்புத்தூா் மருத்துவக்கல்லூரி, எழும்பூா் மகப்பேறு மருத்துவமனை, திருச்சி மருத்துவக்கல்லூரி, கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி, வேலூா் மருத்துவக்கல்லூரி, தருமபுரி மருத்துவக்கல்லூரி, திருப்பத்தூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, விருதுநகா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து, பச்சிளம் குழந்தை இதய அறுவை சிகிச்சைகளை திறம்பட மேற்கொண்டமைக்காக மருத்துவா்கள் ஜெயகரன், நெவில் சாலமன், முத்துக்குமரன், கணபதி ஆகியோருக்கும் விருது வழங்கி கௌரவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com