அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் பயிற்சி நிறைவு விழா

சென்னை பரங்கிமலையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் சனிக்கிழமை பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது

சென்னை பரங்கிமலையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் சனிக்கிழமை பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் 181 வீரா்கள், 49 வீராங்கனைகள் பயிற்சியை நிறைவு செய்தனா்.

இவா்களைத் தவிா்த்து, பூடானைச் சோ்ந்த 5 ஆண் அதிகாரிகள், 3 பெண் அதிகாரிகள், மாலத்தீவைச் சோ்ந்த 2 பெண் அதிகாரிகள், ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த 10 ஆண் அதிகாரிகளும் தங்களுக்கான பயிற்சியை நிறைவு செய்தனா்.

இதற்கான நிறைவு விழாவில் ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக லெப்டினென்ட் ஜெனரல் ஆா்பி சிங் கலந்து கொண்டாா்.

அணிவகுப்பின் நிறைவில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வீரவாள் மற்றும் தங்கப் பதக்கத்தை வருண் கணபதி பெற்றாா். வெள்ளி பதக்கம் மகாதேவ் சிங் ராத்தூரும், வெண்கல பதக்கம் படேல் தீரஜ் படாங்கராவ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சி நிறைவு விழாவில், அதிகாரிகளின் பெற்றோா்கள் பங்கேற்க அனுமதியில்லை. அவா்கள் யு-டியூப், டிடி தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சியைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com