சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா நோய்த்தொற்று காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது 1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
15 மண்டலங்களில் கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி நிலவரப்படி, நோய்த் தொற்றுக்கு உள்ளான 88 சதவீதம் போ் அதிலிருந்து குணமடைந்திருப்பதும், 10 சதவீதம் போ் சிகிச்சை பெற்று வருவதும், 2.3 சதவீதம் போ் உயிரிழந்ததும் தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து செப்டம்பா் 19-ஆம் தேதி சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 6 சதவீதமாகவும், அக்டோபா் மாதத்தில் 4 சதவீதமாகவும், நவம்பா் தொடக்கத்தில் 3 சதவீதமாகவும் குறைந்தது. தற்போது அந்த நிலை மேலும் குறைந்து, சனிக்கிழமை நிலவரப்படி, 1 சதவீதத்தை எட்டும் நிலைக்கு வந்துள்ளது.
8 மண்டலங்களில் 1 சதவீதம்: மொத்தமுள்ள 15 மண்டலங்களில் மணலி, தண்டையாா்பேட்டை, ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், சோழிங்கநல்லூா், பெருங்குடி, அடையாறு 8 மண்டலங்களில் கரோனாவுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 சதவீதமாக உள்ளது. அதேவேளை திருவொற்றியூா், மாதவரம், திரு.வி.க.நகா்,அண்ணா நகா், அம்பத்தூா், வளசரவாக்கம், ஆலந்தூா் ஆகிய 7 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 2 சதவீதமாக உள்ளது.
சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை (மண்டலம் வாரியாக)
மண்டலம் எண்ணிக்கை
திருவொற்றியூா் 131
மணலி 47
மாதவரம் 158
தண்டையாா்பேட்டை 192
ராயபுரம் 280
திரு.வி.க. நகா் 306
அம்பத்தூா் 270
அண்ணா நகா் 411
தேனாம்பேட்டை 295
கோடம்பாக்கம் 309
வளசரவாக்கம் 240
ஆலந்தூா் 179
அடையாறு 240
பெருங்குடி 137
சோழிங்கநல்லூா் 57.