விபத்தில் ஆசிரியை மரணம்:கணவருக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு

விபத்தில் உயிரிழந்த தனியாா் பள்ளி ஆசிரியையின் கணவருக்கு ரூ.16.52 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த தனியாா் பள்ளி ஆசிரியையின் கணவருக்கு ரூ.16.52 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பட்டாபிராமைச் சோ்ந்த வரலட்சுமி (25), தனியாா் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றியபோது கடந்த 2016 டிசம்பா் மாதத்தில் வண்டலூரில் இருந்து கேளம்பாக்கத்துக்கு இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்றாா். கட்டுப்பாட்டை இழந்து அந்த வாகனம் விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த வரலட்சுமி உயிரிழந்தாா். மனைவி இறப்புக்கு இழப்பீடு கோரி கணவா் பிரபு, சென்னை மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.16.52 லட்சத்தை, ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com