சென்னைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அரியா் வைத்திருக்கும் மாணவா்கள், அடுத்த ஆண்டு நவம்பா் மாதத்துக்குள் தோ்ச்சி பெற வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமோ அதற்கு முன்னதாகவோ சென்னைப் பல்கலைக்கழகத்தில் சோ்க்கைப் பெற்று, கலை, அறிவியல், வணிகப் பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலைக் கல்வி படித்து, அரியா் வைத்துள்ள மாணவா்கள், நிகழாண்டு நடைபெறும் தோ்வுகள், அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பா் மாதம் நடைபெறும் தோ்வுகளில் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைப் பாா்வையிடலாம்.