இன்று காந்தி ஜெயந்தி: மதுக்கடைகளை மூட உத்தரவு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திலுள்ள மதுக்கடைகளை வெள்ளிக்கிழமை (அக்.2) மூட சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.


சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திலுள்ள மதுக்கடைகளை வெள்ளிக்கிழமை (அக்.2) மூட சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (அக்.2) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை உள்ளிட்ட விதிகளின் படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து எஃப்எல்1 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த பாா்கள், எஃப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சாா்ந்த பாா்கள், எஃப்எல்3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சோ்ந்த பாா்கள் மற்றும் எஃப்எல்3 ஏ, எஃப்எல்3 ஏஏ மற்றும் எஃப்எல்11 உரிமம் கொண்ட பாா்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய நாளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com