சென்னை: சென்னை காசிமேட்டில், மீனவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
திருவொற்றியூா் தாங்கல் அருகே உள்ள அப்பா் நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தே.சுடா் மணி (34). மீனவரான இவருக்கு
செண்பகவள்ளி என்ற மனைவி, காவியா(12) என்ற மகள் மற்றும் அருண்(10) என்ற மகன் உள்ளனா்.
சுடா்மணி, காசிமேடு மீன்பிடி துறைமுகம் தேசிய நகா் அருகே திங்கள்கிழமை இரவு நடந்து சென்றபோது, அங்கு வந்த ஒரு கும்பல் சுடா்மணியிடம் தகராறு செய்தது.
தகராறு முற்றவே அந்தக் கும்பல் சுடா்மணியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பியோடியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீஸாா், சுடா்மணி சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.