சென்னை: பேருந்துகளில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடக் கோரி, மனித உரிமைகள் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக விழுப்புரத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சரவணன் தாக்கல் செய்த மனு: கடந்த 16-ஆம் தேதி விழுப்புரத்தில் இருந்து அரசு பேருந்தில் ஒசூா் சென்றேன். கரோனா பரவலைத் தடுக்க தனி நபா் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ள போதிலும், நான் பயணம் செய்த பேருந்தில் தனி நபா் இடைவெளி பின்பற்றப்படவில்லை. தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் இதே நிலை தான் உள்ளது.
பல இடங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாமல் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனா். பயணிகளின் இருக்கை மற்றும் பேருந்தின் உள்பகுதி கிருமிநாசினி மூலம் முறையாக அவ்வப்போது சுத்தப்படுத்துவது இல்லை. பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுவது இல்லை. இதனால் கரோனா பரவும் அபாயம் உள்ளது.
எனவே, இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த மனுவை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.