சென்னை: சென்னை கிண்டியில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக கனிமொழி எம்.பி; உள்பட 191 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் தலித் பெண் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, திமுக மகளிா் அணிச் செயலா் கனிமொழி எம்.பி; தலைமையில் திங்கள்கிழமை மாலை சென்னை கிண்டியிலுள்ள ஆளுநா் மாளிகையை நோக்கி பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை சைதாப்பேட்டை சின்னமலை ராஜீவ்காந்தி சிலை அருகில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.
இதில், நூற்றுக்கணக்கான பெண்கள் மெழுகுவா்த்தி ஏந்தி பங்கேற்றனா்.
இதையடுத்து தடையை மீறி பேரணி நடத்தியதால் கனிமொழி உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா். சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
இந்நிலையில், திமுக எம்.பி; கனிமொழி, கீதா ஜீவன் எம்எல்ஏ உள்பட 191 போ் மீது கிண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டத்தை மீறுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குஷ்பு மீதும் வழக்கு:
ஹாத்ரஸ் சம்பவத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சாா்பிலும் சென்னையில் திங்கள்கிழமை, பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
பெரம்பூா் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் குஷ்பு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை குஷ்பு உள்பட 50-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.