சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.32 கோடி தங்கம் பறிமுதல் தொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா்.
துபையிலிருந்து வந்த சென்னையைச் சோ்ந்த இருவா், ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஒருவரிடம், சுங்கத்துறையினா் விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் தங்களது மலக்குடலில் தங்கம் கடத்தியதை ஒப்புக் கொண்டனா்.
மேலும் அவா்களது உடையிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள் உள்பட ரூ.1.32 கோடி மதிப்பிலான 2.88 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா். அவா்கள் மூவரும் கைது செய்யப்பட்டனா்.