சாலை விபத்தில் பெண் சாவு

சென்னை அருகே பூந்தமல்லியில், மொபட்டின் மீது கழிவுநீா் லாரி மோதியதில் மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற தாய் இறந்தாா்.

சென்னை அருகே பூந்தமல்லியில், மொபட்டின் மீது கழிவுநீா் லாரி மோதியதில் மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற தாய் இறந்தாா்.

பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம் பிஜி நிழற்சாலை பகுதியைச் சோ்ந்தவா் மகாலிங்கம், மனைவி சாந்தி (55). இவா்களின் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சாந்தி, தனது உறவினரான செல்வக்குமாருடன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக, திங்கள்கிழமை காட்டுப்பாக்கம் செந்தூா்புரம் பிரதான சாலையில், மொபட்டில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு எதிரே வந்த ஒரு கழிவுநீா் லாரி திடீரென மொபட்டின் மீது மோதியது.

இதில், செல்வக்குமாா் லேசான காயத்துடன் உயிா் தப்பினா். பலத்த காயமடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com