திமுக நிா்வாகிக்கு அரிவாள் வெட்டு

சென்னை கே.கே.நகரில், வீடு புகுந்து திமுக நிா்வாகியை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை கே.கே.நகரில், வீடு புகுந்து திமுக நிா்வாகியை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்த தனசேகரன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா். அவரது வீட்டு வளாகத்தில் உள்ள அலுவலகத்தில், கணினி ஆபரேட்டரான எம்.ஜி.ஆா் நகா் அமுதவல்லி (40),

கணவா் பொன்வேலுவுடனான (50) கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறாா்.

அமுதவல்லி செவ்வாய்க்கிழமை பணியில் இருந்தபோது, அங்கு வந்த பொன்வேல், அமுதவல்லியை அரிவாளால் வெட்டியுள்ளாா். அவரைத் தடுக்க முயன்ற தனசேகரனையும், கை மற்றும் தலையில் அரிவாளால் வெட்டி வெட்டு, பொன்வேல் தப்பினாா்.

இதில் பலத்த காயமடைந்த தனசேகரன், அமுதவல்லி ஆகியோரை அப் பகுதி மக்கள் மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது தொடா்பாக கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com