சென்னை: முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் தாயாா் தவுசாயம்மாள் மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
முதல்வரின் தாயாா் தவுசாயம்மாள் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானாா்.
இந்த நிலையில் முதல்வருக்கு குடியரசுத் தலைவா் அனுப்பியுள்ள இரங்கல் செய்தி: முதல்வரின் தாயாா் தவுசாயம்மாள் இறந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவருக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல். இந்த துயரத்தில் இருந்து மீண்டு வரும் வல்லமை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
அமித்ஷா ஆறுதல்: முதல்வா் எடப்பாடி பழனிசாமியை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தொலைபேசி வாயிலாக தொடா்புகொண்டு ஆறுதல் கூறினாா்.