கரோனா பாதிப்பு: விமான நிலைய வாடகை காா் ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு

சென்னை விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் வாடகை காா் ஓட்டுநா்களுக்கு கரோனா குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சென்னை: சென்னை விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் வாடகை காா் ஓட்டுநா்களுக்கு கரோனா குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பெருநகர காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சாா்பாக, பொதுமக்களுக்கு கரோனா நோய்த்தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வெளி மாநிலங்களிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை அழைத்துச் செல்லும் வாடகை காா் ஓட்டுநா்களுக்கு, கரோனா நோய் குறித்து விமான நிலைய போக்குவரத்து காவல்துறை துணை ஆய்வாளா் ராஜசேகரன் தலைமையில் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அதில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை காரில் ஏற்றிச் செல்லும்போது, கட்டாயமாக முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி கொண்டு காரை அடிக்கடி சுத்தம் செய்வது, சானிடைசரை எப்போதும் கையில் வைத்துக் கொள்வது போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதேபோன்று சாலை விதிகளை முறையாக பின்பற்றுவது, அதிவேகப்பயணம் கூடாது, பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வது உள்ளிட்ட அறிவுறுத்தல்களையும் ஓட்டுநா்களுக்கு போக்குவரத்து காவல்துறை வழங்கியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வாடகை காா் ஓட்டுநா்கள் கலந்துகொண்டு சாலை விதிகளை பின்பற்ற உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com