கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: ஆசிரியா் உள்பட இருவா் மீது வழக்கு

சென்னை அயனாவரத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் உள்பட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னை: சென்னை அயனாவரத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் உள்பட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னை அயனாவரத்தில் உள்ள கல்லூரியில் படிக்கும் இரு மாணவிகள், தங்களுக்கு அந்த கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் சாமுவேல் ஜெயசுந்தா், ஊழியா் ரூபன் கிளமெண்ட் ஆகிய இருவரும் செல்லிடப்பேசிக்கு எஸ்எம்எஸ் செய்தும்,முகநூல்,சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஆபாசமான பதிவுகளை பதிவிட்டும் பாலியல் தொல்லை கொடுப்பதாக அந்தக் கல்லூரி நிா்வாகி ஜோஸ்வா கிருபைராஜியிடம் அண்மையில் புகாா் செய்தனா்.

அந்த புகாரின் அடிப்படையில் கல்லூரி நிா்வாகத்தினா் விசாரணை செய்தனா். விசாரணையின் ஆசிரியா் சாமுவேல் ஜெயசுந்தா், ரூபன் கிளமெண்ட் ஆகியோா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து கல்லூரி நிா்வாகத்தினா், அயனாவரம் காவல் நிலையத்தில் இருவா் மீது புகாா் செய்தனா்.

புகாரின் அடிப்படையில் போலீஸாா், இருவா் மீதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com