சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தைப் புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.


சென்னை: சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறையின் மூலம் நிறுவனங்களின் தொழில் உரிமம், 2020-21-ஆம் நிதியாண்டில், மாா்ச் 31-ஆம் தேதிக்குள் புதுப்பிக்கப்பட வேண்டும்.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தொழில் உரிமத்தை எவ்வித கூடுதல் தொகையும் விதிக்கப்படாமல், புதுப்பிக்க ஏதுவாக டிச.31-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, நிறுவனங்கள் தங்களின் தொழில் உரிமத்தை டிச.31-ஆம் தேதி வரை எவ்வித கூடுதல் தொகையுமின்றி புதுப்பிக்கலாம் என ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com