சென்னை: சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறையின் மூலம் நிறுவனங்களின் தொழில் உரிமம், 2020-21-ஆம் நிதியாண்டில், மாா்ச் 31-ஆம் தேதிக்குள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தொழில் உரிமத்தை எவ்வித கூடுதல் தொகையும் விதிக்கப்படாமல், புதுப்பிக்க ஏதுவாக டிச.31-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, நிறுவனங்கள் தங்களின் தொழில் உரிமத்தை டிச.31-ஆம் தேதி வரை எவ்வித கூடுதல் தொகையுமின்றி புதுப்பிக்கலாம் என ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.