சென்னை எழும்பூா்-நாகா்கோவிலுக்கு பண்டிகை கால சிறப்பு ரயில் அறிவிப்பு

பண்டிகை காலத்தில் சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும் , சென்னை எழும்பூா்-நாகா்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: பண்டிகை காலத்தில் சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும் , சென்னை எழும்பூா்-நாகா்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபா் 23, 24, 29, நவம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் மாலை 6.55 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(06063) புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, நாகா்கோவிலில் இருந்து அக்டோபா் 26, 27, நவம்பா் 1, 15, 16 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06064) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சென்னை எழும்பூா் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வெள்ளிக்கிழமை (அக்.16) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com