பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் காவல்துறை: சென்னையில் திட்டம் தொடக்கம்
சென்னை: பொதுமக்களின் குறைகளை காவல்துறை கேட்கும் புதிய திட்டம் சென்னையில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
இது குறித்த விவரம்:
சென்னையில் குற்றங்களைக் குறைக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொது மக்கள்,காவல்துறை நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பொது மக்களிடம் நேரில் சென்று குறைகளைக் கேட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின்படி சைதாப்பேட்டை பகுதியில் அடையாறு துணை ஆணையா் விக்ரமன் தலைமையில் அதிகாரிகள் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா். தரமணி உதவி ஆணையா் பி.கே.ரவி, தரமணி, காவல் ஆய்வாளா் புஷ்பராஜ், எஸ்.ஐ. இளம்வழுதி ஆகியோா் எம்.ஜி.நகா் பகுதியில் நடந்து சென்று பொதுமக்கள் குறைகளைக் கேட்டனா். இதேபோல, தரமணி கானகம் பகுதியில் வியாழக்கிழமை குறைகளைக் கேட்டனா்.
வளசரவாக்கம் உதவி ஆணையா் மகிமைவீரன் தலைமையில் போலீஸாா் ராயலா நகா் வ.உ.சி. தெரு,, திருமலை நகா், ராமாபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் கலந்துரையாடி, அவா்களது குறைகளைக் கேட்டனா். மேலும், ஏதாவது சந்தேக நபா்கள், குற்றச்சம்பவங்கள் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படியும் காவல் அதிகாரிகள் தங்களது செல்போன் எண்களைப் பொதுமக்களுக்கு வழங்கினா்.
குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் வசிக்குமிடங்கள், தனிமை வீடுகள் அமைந்துள்ள பகுதிகள் ஆகிய இடங்களில் போலீஸாா் மக்களைச் சந்தித்து குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.