சென்னை: அரும்பாக்கம் மின்மயானம், வெள்ளிக்கிழமை (அக்.16) முதல் 5 நாள்களுக்கு இயங்காது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகா் மண்டலத்தின் அரும்பாக்கம் இந்து மின்மயானத்தில், உடலை எரிக்கும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை (அக்.16) முதல் அக்.20-ஆம் தேதி வரை அரும்பாக்கம் இந்து மின்மயானம் மூடப்படுகிறது.
பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் அருகில் உள்ள அண்ணாநகா் புது ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு இந்து மயானபூமி மற்றும் நுங்கம்பாக்கம் இந்து மயானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.