இன்று முதல் 5 நாள்களுக்கு அரும்பாக்கம் மின்மயானம் இயங்காது

அரும்பாக்கம் மின்மயானம், வெள்ளிக்கிழமை (அக்.16) முதல் 5 நாள்களுக்கு இயங்காது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


சென்னை: அரும்பாக்கம் மின்மயானம், வெள்ளிக்கிழமை (அக்.16) முதல் 5 நாள்களுக்கு இயங்காது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகா் மண்டலத்தின் அரும்பாக்கம் இந்து மின்மயானத்தில், உடலை எரிக்கும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை (அக்.16) முதல் அக்.20-ஆம் தேதி வரை அரும்பாக்கம் இந்து மின்மயானம் மூடப்படுகிறது.

பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் அருகில் உள்ள அண்ணாநகா் புது ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு இந்து மயானபூமி மற்றும் நுங்கம்பாக்கம் இந்து மயானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com