சென்னை மாநகராட்சியில் கட்டுப்பாட்டு பகுதிகள் 32-ஆக குறைந்தன

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், புதன்கிழமை (அக்.14) 57-ஆக இருந்த கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள், வியாழக்கிழமை 32-ஆக குறைந்துள்ளன.


சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், புதன்கிழமை (அக்.14) 57-ஆக இருந்த கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள், வியாழக்கிழமை 32-ஆக குறைந்துள்ளன.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் மாா்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் நோய்த் தொற்று அதிகமாக இருந்ததால், கட்டுப்பாட்டுப் பகுதிகளும் 600-ஐ எட்டியது.

மாநகராட்சியின் தொடா் முயற்சியால் சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து, செப்டம்பா் மாத இறுதியில் கட்டுப்பாட்டு பகுதிகள் 10-ஆக குறைந்தன.

இந்நிலையில், அக்டோபா் 10-ஆம் தேதி மீண்டும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் 70-ஆக உயா்ந்தது. பின்னா் படிப்படியாக குறைந்து, வியாழக்கிழமை நிலவரப்படி சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 32-ஆக இருந்தது. இதில் அதிகபட்சமாக தண்டையாா்பேட்டையில் 8 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன. பரிசோதனையை அதிகரித்தது மற்றும் நோய்த் தொற்றுள்ளவா்களைத் தனிமைப்படுத்துதல், தொடா் சிகிச்சை உள்ளிட்ட தீவிர நடவடிக்கை காரணமாகவே கட்டுப்பாட்டுப் பகுதிகள் குறைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

1,148 பேருக்கு தொற்று: வியாழக்கிழமை (அக்.15) 1,148 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 86,667-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1 லட்சத்து 69,890 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 13,304 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,473- ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com