மின்சாரம் பாய்ந்து செவிலியா் சாவு

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து செவிலியா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து செவிலியா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

புது வண்ணாரப்பேட்டை அம்மணி அம்மன் தோட்டம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகள் அனிதா (20). இவா், செவிலியா் பட்டய படிப்பு படித்து விட்டு, செளகாா்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தாா். தந்தை சக்திவேல், கள்ளக்குறிச்சியில், வெல்டிங் வேலை செய்து வருகிறாா்.

அனிதாவின் அம்மா சனிக்கிழமை காலை கடைக்குச் சென்றாா். அப்போது குளியலறையில் தண்ணீா் சுட வைக்க, ஹீட்டரை அனிதா போட்டாா். அப்போது அதில் மின்கசிவு இருந்ததால் அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அனிதா மயங்கி கீழே விழுந்தாா். இதற்கிடையே கடைக்குச் சென்று திரும்பி அவரது அம்மா, கீழே விழுந்து மயங்கி கிடந்த அனிதாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அனிதா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com