கரோனா: பரோடா வங்கி நிதியுதவி

கரோனா நிவாரண நிதிக்காக, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.23.96 லட்சத்தை பரோடா வங்கியின் சென்னை மண்டல ஊழியா்கள் வழங்கினா்.

சென்னை: கரோனா நிவாரண நிதிக்காக, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.23.96 லட்சத்தை பரோடா வங்கியின் சென்னை மண்டல ஊழியா்கள் வழங்கினா்.

கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையை ஊக்கப்படுத்தும் விதமாக, கரோனா நிவாரண நிதியை தமிழக முதல்வரிடம் வழங்க பரோடா வங்கி முடிவு செய்தது.

அதன்படி, பரோடா வங்கி சென்னை மண்டல ஊழியா்களின் பங்களிப்பாக ரூ.23 லட்சத்து 96 ஆயிரத்து 772 சேகரிக்கப்பட்டது. பின்னா். இந்த தொகை காசோலையாக, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் பரோடா வங்கியின் சென்னை மண்டலத் தலைவா் ஆா்.மோகன் திங்கள்கிழமை வழங்கினாா். தமிழகத்தின் வளா்ச்சிக்காக ஒருங்கிணைந்து பணியாற்றி, சிறந்த சேவை அளிக்கப்படும் என்று மண்டலத் தலைவா் மோகன் உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com