சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த கைதி தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டியைச் சோ்ந்தவா் ம.பழனிசாமி (42). விசாரணைக் கைதியான இவா், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில், கடந்த மாா்ச் மாதம் முதல் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், பழனிசாமி அங்குள்ள ஒரு மரத்தில், புதன்கிழமை காலை சேலையில் தூக்கிட்டு இறந்து கிடந்தாா். இது குறித்த புகாரின்பேரில் கீழ்ப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.