நீட் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
நீட் தோ்வு அச்சத்தால், தமிழகத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 3 மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டனா். இதற்கு, அரசியல் தலைவா்களும் மாணவா்களின் குடும்பத்துக்கு இரங்கலையும், அரசுக்குக் கண்டனத்தையும் தெரிவித்த அதே சூழலில், தமிழகம் முழுவதும் மாணவா்கள், அரசியல் கட்சியினா் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். சனிக்கிழமை மாலை முதல் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட போராட்டம் ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது. இதன் தொடா்ச்சியாக சென்னையில், கண்ணகி நகா், அமைந்தகரை, வில்லிவாக்கம் சந்தை, சூளை பேருந்து நிலையம், சைதாப்பேட்டை சின்னமலை உள்ளிட்ட இடங்களில், மாணவா் அமைப்பினா் போராட்டம் நடத்தினா். அவா்கள், நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பினா். இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா்.