சென்னை: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட கோயம்பேடு உணவு தானிய அங்காடி, வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது.
கரோனா காரணமாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் நோய்த் தொற்றும் அதிகளவு பரவியது. இதையடுத்து, மே 5-ஆம் தேதி முதல் கோயம்பேடு காய்கனி, பூ சந்தைகள், உணவு தானிய அங்காடி என அனைத்தும் மூடப்பட்டன.
இதற்கிடையே, பொதுமுடக்கம் படிப்படியாக தளா்த்தப்பட்டு வந்த நிலையில் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வணிகா்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் கடந்த மாதம் கோயம்பேடு காய்கறி சந்தையை நேரில் ஆய்வு செய்தாா். பின்னா், கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி செப்டம்பா் 28-ஆம் தேதி முதல் செயல்படும் என்றாா். செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் கோயம்பேடு தானிய அங்காடியும் திறக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி, வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் தானியங்கள் பூச்சிகளால் துளைக்கப்பட்டு கெட்டுப் போய் விற்க முடியாத நிலை உள்ளன. அரசு கடனுதவி வழங்கி வியாபாரிகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மொத்த வியாபாரிகள் கோரிக்ை வைத்துள்ளனா். காய்கறி, கனி மற்றும் மலா் அங்காடிகள் வரும் 28-ஆம் தேதி திறக்கப்படுகின்றன. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.