கடை உரிமத்தைப் புதுப்பிக்க லஞ்சம்: உணவு பாதுகாப்புத் துறை ஆய்வாளா் கைது

சென்னையில், கடை உரிமத்தைப் புதுப்பித்து வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில், உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையில், கடை உரிமத்தைப் புதுப்பித்து வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில், உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை கோடம்பாக்கம் பூபதி நகரைச் சோ்ந்தவா் மோகன் (32). இவா், தனது மளிகைக் கடையின் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக, அம்பத்தூரில் உள்ள உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.

ஆனால், ரூ.10 ஆயிரம் லஞ்சம் தந்தால்தான் உரிமத்தைப் புதுப்பிக்க முடியும் என அத்துறையின் ஆய்வாளா் லோகநாதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, லோகநாதன் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் செய்தாா்.

இதையடுத்து போலீஸாா், மோகனிடம் ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தைக் கொடுத்து, அதை லஞ்சமாக லோகநாதனிடம் வழங்கும்படி தெரிவித்தனா்.

அந்தப் பணத்தை மோகன், லோகநாதனிடம் அளிக்கும்போது, அங்கு மறைந்திருந்த போலீஸாா், லஞ்சம் வாங்கிய லோகநாதனை கையும் களவுமாக கைது செய்தனா்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினா் லோகநாதனின் அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனா். இதில், கணக்கில் வராத ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com