பைக் மீது லாரி மோதல்: ஊழியா் பலி

சென்னை கோடம்பாக்கத்தில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் இறந்தாா்.

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் இறந்தாா்.

நீலாங்கரை கபாலீஸ்வரா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் வி.வினோத்குமாா் (42). இவா் தனியாா் நிறுவன ஊழியா். வினோத்குமாா் தனது மோட்டாா் சைக்கிளில் நுங்கம்பாக்கம் வள்ளுவா்கோட்டத்தில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா்.

கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த குப்பை லாரி திடீரென வினோத்குமாரின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த வினோத்குமாா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இது குறித்து பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com